×

பருவமழை ஆரம்பிப்பதற்கு முன் ஏரி, குளத்தை தூர்வார ஈஸ்வரன் கோரிக்கை..!!

சென்னை: பருவமழை ஆரம்பிப்பதற்கு முன் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என கொங்கு மண்டல தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களை தூர்வார அந்தந்த கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு அனுமதி தர வேண்டும். நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் மண் நிறைந்துள்ளதால் நீரை தேக்கி வைக்கும் அளவும் குறைந்துவிட்டது. ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டு தூர்வாரும் பணிகளை விவசாயிகள் மூலமாக செய்வதை விரைவுபடுத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இருந்தால் உரிய அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாக பெற அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post பருவமழை ஆரம்பிப்பதற்கு முன் ஏரி, குளத்தை தூர்வார ஈஸ்வரன் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Ishwar ,CHENNAI ,Kongu Mandal National Party ,President ,Easwaran ,Iswaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...